கனடாவில் காணாமல் போன தாய் மற்றும் குழந்தை
கனடாவின் வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த வாரம் முதல் காணாமல் போன தாய் மற்றும் அவரது ஒரு மாதக் குழந்தையைக் கண்டறிய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
ஃபோர்ட் செயின்ட் ஜான் ஆர்.சி.எம்.பி காவல்துறை தரப்பில், 31 வயதான நிகோல் ஆண்ட்ரஸ் மற்றும் அவரது ஒரு மாதமே ஆன மகன் க்ரூ கோர்டன் ஆகிய இருவரும் ஜூலை 9 முதல் நேரில் எவராலும் பார்க்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் காணாமல் போனது குறித்து கடந்த வியாழக்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

"நிகோல் தனது குடும்பத்தினருடன் தொடர்பில்லாமல் இருப்பது வழப்பத்திற்கு மாறானது என்பதால், காவல்துறையினரும் அவரது குடும்பத்தினரும் அவர்களின் பாதுகாப்பு குறித்து மிகுந்த கவலை அடைந்துள்ளனர்" என்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காணாமல் போன நிகோல் மற்றும் அவரது குழந்தை இருவரும், RK360C என்ற பிரிட்டிஷ் கொலம்பியா உரிமத் தகடு கொண்ட பச்சை நிற 2003 ஃபோர்ட் எக்ஸ்பெடிஷன் வாகனத்தில் பயணித்திருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர்.
நிகோல் ஆண்ட்ரஸ்: வெள்ளை இனப் பெண், 5 அடி 7 அங்குலம் உயரம், சுமார் 61 கிலோ எடை, பழுப்பு நிற முடி மற்றும் ஹேசல் நிற கண்கள் கொண்டவர்.
இந்தத் தாய், குழந்தை அல்லது அவர்கள் பயணித்த வாகனத்தை யாராவது பார்த்தால், உடனடியாக காவல்துறையை 250-787-8140 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தகவல்களை ரகசியமாக வழங்க விரும்புவோர் 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பை 1-800-222-8477 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.