சைபீரியாவில் 16 வயது சிறுவனை உயிருடன் தின்ற கரடி!
சைபீரியாவில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் சுற்றுலா பயணிகளை தாக்கிய கரடி சிறுவனை தாக்கி தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சைபீரியாவில் உள்ள Krasnoyarsk மாகாணத்தின் தேசிய பூங்காவில் கடந்த திங்கட்கிழமை அன்று கரடி ஒன்று சுற்றுலா பயணிகளை தாக்கியுள்ளது. அதன் பின்பு 16 வயதுள்ள ஒரு சிறுவனை தாக்கி பாதி தின்ற நிலையில் அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் அந்த கரடியை கத்தியால் குத்தியுள்ளார்.
அதன்பின்பு அங்கிருந்த மக்கள் உடனடியாக காவலர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு காவலர்கள் விரைந்தபோது துப்பாக்கியுடன் வந்த காவலர்களை பார்த்தவுடன் கரடி காட்டுப்பகுதிக்குள் தப்பிவிட்டது.
எனினும் பல மணி நேரம் போராடி காவலர்கள் கரடியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். அந்த
இதேவேளை கரடிக்கு தேவையான உணவு கிடைக்காததால் இவ்வாறு தாக்கியதாக பூங்காவில் உள்ள நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.