வீட்டுக்குப் பின்னால் நபர் கண்ட திடுக்கிடவைத்த காட்சி... ஆறு மணி நேரம் பொலிசாருக்கு ஆட்டம் காட்டிய ஒரு சம்பவம்
கனடாவில் ஆறு மணி நேரம் பொலிசாருக்கு ஆட்டம் காட்டிய கரடி ஒன்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
நேற்று மதியம் தங்கள் வீடுகளின் பின்னால் கரடி ஒன்று நடமாடுவதாக மொன்றியல் பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.
உடனே கரடியைப் பிடிக்க களமிறங்கிய பொலிசார், மக்களை வீடுகளுக்குள் இருக்கும்படி எச்சரிக்கை விடுத்துவிட்டு கரடியைத் தேடத்துவங்கியுள்ளனர்.
Dorval என்ற இடத்தில் வசிக்கும் William Weston என்பவர், அந்த கரடி தன் பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டுக்குப் பின்னால் நிற்பதைக் கண்டு அதைப் புகைப்படம் எடுத்துவிட்டு, பொலிசாரை அழைத்திருக்கிறார்.
அவர்கள் வருவதற்குள் அது ஒரு மரத்தின் மீது ஏறியிருக்கிறது. சுமார் ஆறு மனி நேரம் ஆட்டம் காட்டியபின், இரண்டு மயக்க ஊசிகளை பொலிசார் துப்பாக்கி மூலம் செலுத்த, கரடி மயங்கி விழுந்திருக்கிறது.
அதற்குப் பிறகுதான் விலங்குகள் பிடிப்போர் உதவியுடன் அந்த கரடியை பொலிசாரால் பிடிக்க முடிந்திருக்கிறது.
அந்த கரடி எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை. பொலிசார் அதை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்ற பிறகே மக்கள் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.