சீனாவில் மீண்டும் கொரோனா: மாரத்தான் போட்டிகள் ஒத்திவைப்பு
சீனாவின் பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து மாரத்தான் போட்டிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹானிலிருந்து பரவிய கொரோனா உலக நாடுகளை உலுக்கி வருகிறது, இந்நிலையில் கொரோனா பரவலை வெற்றிகரமாக சீனா கட்டுப்படுத்தியதாக கூறினாலும் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக பெய்ஜிங்கில் புதிதாக 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதனை தொடர்ந்து பெய்ஜிங்கில் நடைபெறவிருந்த மாரத்தான் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அலுவலர்கள் கூறுகையில், மாரத்தான் போட்டி, தொற்றை கட்டுப்படுத்தும் முனைப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளது. நகரத்தில் பூஜ்ய கோவிட் பாதிப்பு என்ற நிலையை எட்டுவோம். இந்தப் பாதிப்பும் சுற்றுலாப் பயணிகளால் பரவியிருக்கக் கூடும்” என்றனர்.