பெற்றோர் கண் முன்னே 3 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்: வான்கூவர் தீவில் சம்பவம்
வான்கூவர் தீவில் சகோதரருடன் விளையாடும் போது மூன்று வயது சிறுமி பாறையில் அடிபட்டு இறந்த சம்பவம் அவரது பெற்றோரை மொத்தமாக உலுக்கியுள்ளது.
குறித்த சம்பவமானது வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்ததாக அவர்கள் தங்கியிருந்த ரிசார்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வான்கூவர் தீவில் உள்ள மவுண்ட் வாஷிங்டனில் பெற்றோர் முன்னிலையில் சகோதரருடன் குறித்த சிறுமி மினியேச்சர் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே பாறையில் அடிபட்டு சிறுமி சுய நினைவை இழந்துள்ளார். இந்த நிலையில் முதலுதவி அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனை கொண்டு செல்ல முயற்சித்த நிலையில், சிறுமி இறந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாரும் பிரிட்டிஷ் கொலம்பியா உடற்கூராய்வு அலுவலகமும் விசாரணை முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.