ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிற்கு பைடன் விடுத்த எச்சரிக்கை!
உக்ரைன் மீது தாக்குதலை மேற்கொண்டால் ரஸ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிற்கு (Vladimir Putin) எதிராக தனிப்பட்ட தடைகளை விதிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe biden) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஸ்யா தனது தென்மேற்கு எல்லையில் உள்ள நாட்டிற்குள் நுழைந்தால் பாரிய விளைவுகள் ஏற்படும் எனவும் ஜோ பைடன் (Joe biden)தெரிவித்துள்ளார்.
ரஸ்யா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் புட்டினிற்கு எதிராக தனிப்பட்ட ரீதியில்தடைகள் விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு ஜோ பைடன் (Joe biden) ஆம் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரஸ்யாவின் நடவடிக்கையினால் உலகிற்கு பாரிய விளைவுகள் ஏற்படலாம்,இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற பாரிய ஆக்கிரமிப்பாக அது காணப்படும் என ஜோ பைடன் (Joe biden) கூறினார்.
ஐரோப்பாவில் நேட்டோவின் பிரசன்னத்தை அதிகரிக்கவேண்டிய கடப்பாடு தனக்குள்ளது என தெரிவித்துள்ள ஜோ பைடன்(Joe biden) உக்ரைனிற்கு அமெரிக்க படையினரை அனுப்பும் திட்டம் இல்லை எனவும் தெரிவித்தார்.