சீனாவில் உள்ள உணவகம் ஒன்றில் பாரிய தீ விபத்து! 17 பேருக்கு நேர்ந்த சோகம்
சீனாவில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் சாங்சுன் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் இன்றைய தினம் (28-09-2022) மதியம் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
விபத்து தொடர்பில் தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த பயங்கர தீ விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.