பில்கேட்ஸ் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ய இவர் தான் காரணமாம்!!!
தன்னுடைய காதல் மனைவியான மெலிண்டாவை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளார் பில்கேட்ஸ்.
இவர்களது 27 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வரவுள்ளது, விவாகரத்து என இருவரும் அறிவித்ததும் இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்றே பலரும் தேடினர்.
இது குறித்து அமெரிக்காவில் வெளியாகும், 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் விபரம், பாலியல் வழக்குகளில் சிறை தண்டனை பெற்ற, மறைந்த தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டெய்னுடன், 2013 முதல், பில் கேட்ஸ் தொடர்பில் இருந்துள்ளார்.
நியூயார்க் நகரில் ஜெப்ரிக்கு சொந்தமான வீட்டில், பலமுறை அவரை சந்தித்து பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார், இவர்களது நட்பின் மீது மெலிண்டாவுக்கு அதிருப்தி இருந்தது.
இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு கூட இருந்தது, ஆனால் தன்னுடைய அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவது தொடர்பாகவே இருவரும் சந்தித்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2019ம் ஆண்டிலிருந்தே இருவரும் விவாகரத்து என்ற முடிவை எடுத்ததாகவும், அப்போதே தங்களது மண வாழ்க்கை முடிந்துவிட்டதாக மெலிண்டா கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.