பாகிஸ்தானில் மீண்டுமொரு மத நிந்தனை கொலை; அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்
பாகிஸ்தானில் மற்றுமொருவர் கட்டிவைத்து கல்லால் அடித்துகொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
குறித்த நபர் குரான் நூலின் பக்கங்களை கிழித்து, தீ வைத்து எரித்து விட்டதாகவும் அவர் மத நிந்தணை செய்துள்ளதாகவும் கூறியே கொலைச்செய்யப்பட்டுள்ளார்.
அடிப்படைவாத குழுவொன்றே இந்த கொலைக்கு பின்னணியில் உள்ளதாக அந்நாட்டு பொலிசாரை சுட்டிக்காட்டி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது ஜங்கல் டேரா கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
41 வயதான முஸ்டாக் அகமது என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
இதன்படி சம்பவத்தின் போது முஸ்டாக் அகமது நான் குரானை எரிக்கவே இல்லை என்று கதறி அழுதுள்ளார்.
எனினும் அவர் சம்பவ இடத்திலேயே மிக கொடுரமாக தாக்குதலுக்கு உள்ளான நிலையில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த அடிப்படைவாத குழு படுகொலை செய்ததோடு, அவரின் சடலத்தை மரத்தில் கட்டி தொங்கவிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளதுடன் இவ்வகையான வன்முறைக்கு எனது அரசு இடமளிக்காது என பாகிஸ்தான் பிரதமர் கண்டித்துள்ளார்.
இலங்கை பிரஜையொருவரை மத நிந்தனை செய்ததாக தாக்கி கொலை செய்த பின்னர் அதே போன்றதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமையானது மத அடிப்படைவாதத்தின் பேரில் அப்பாவி உயிர்கள் பாகிஸ்தானில் கொலை செய்யப்படுவது மனதிற்கு பெரும் கவலையளிக்கின்றது.