கார் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட 10 பேரின் சடலங்கள்
மெக்ஸிகோவில் கார் ஒன்றிலிருந்து 10 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் மெக்ஸிகோவின் ஸகாடேகாஸ் மாநிலத்தில், மாநில ஆளுநரின் அலவலகத்துக்கு வெளியே வியாழக்கிழமை கைவிடப்பட்டுக் கிடந்த காரில் இச்சடலங்கள் காணப்பட்டன.
Mazda SUV ரகத்தைச் சேர்ந்த காரிலிருந்தே இச்சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் டேவிட் மொன்றியல் கூறியுள்ளார்.
அதோடு கைதானவர்கள் சடலங்களை வைத்துவிட்டுச் செல்வதற்காக வந்தவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் உள்ளூர் அதிகாரிகளின் விசாரணைக்கு உதவிகளை வழங்குவதாக மெக்ஸிகோ பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.