திட்டமிட்ட சம்பவம்... சாலையில் கண்டெடுக்கப்பட்ட இரு சடலங்கள்: பொலிஸ் விளக்கம்
பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒகனகன் பகுதியில் சாலை அருகே கண்டெடுக்கப்பட்ட சடங்கள் தொடர்பில் பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒகனகன் பகுதியில் இந்த வாரத்தில் தம்பதி ஒன்று நடக்க சென்றுள்ளனர். இந்த நிலையில் இரண்டு சடலங்களை அந்த தம்பதி கண்டுள்ளனர்.
உடனடியாக அவர்கள் பொலிசாருக்கு தகவல் அளிக்க, சடலங்கள் காணப்பட்ட நரமதா க்ரீக் வன சேவை சாலைக்கு பொலிசார் விரைந்தனர்.
திங்களன்று பகல் நடந்த இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் தற்போது விளக்கமளித்துள்ளனர். விசாரணையின் ஆரம்பகட்டத்தில் இருப்பதாகவும், இது திட்டமிடப்பட்ட சம்பவமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய சூழலில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.
மேலும், சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருவரை காண நேர்ந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, அந்த நபர்களை இதுவரை அடையாளம் காண முடியவில்லை எனவும், அவர்களுக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு உள்ளனவா என்பது விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.