விற்பனைக்கு வந்த வெடிகுண்டுகள்...வெளியான அதிர்ச்சி தகவல்
சில குண்டுகள் ஓய்ஸ்(Oise) மாவட்டத்தின் மிகப்பெரிய விற்பனைத் தொகுதியான பிளே(Flea) மார்க்கெட்டில் விற்கப்படுகின்றன.
இச்சம்பவம் வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. சந்தையில், யாரோ ஒரு பழங்காலக் கடையில் சில வெடிகுண்டுகளை விற்பனைக்குக் காட்டுகிறார்கள். இந்த முதலாம் உலகப் போரின் வெடிகுண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டதா என்பது குறித்து விற்பனையாளரிடம் எந்தத் தகவலும் இல்லாததால் உடனடியாக காவல்துறை அழைக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஜொன்டமின்களும் பொலிஸாரும் சந்தையின் ஒரு பகுதியில் இருந்தவர்களை உடனடியாக வெளியேற்றினர். இதையடுத்து வெடிகுண்டுகளை சோதனையிட கண்ணிவெடி அகற்றும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அதன் முடிவில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகள் ஆபத்தானவை அல்ல என்பது தெரியவந்தது. எனினும் அதிகாரிகள் பிடியில் சிக்கியதோடு விற்பனைக்கு கொண்டு வந்த நபரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.