லண்டனில் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் ஊசிகள்!
பிரிட்டனில் வரும் செப்டெம்பர் மாதம் தொடக்கம், 50 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் அனைவருக்கும் பூஸ்டர் ஊசிகள் என அழைக்கப்படும், மேலதிக ஊசிகள் போடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே 2 ஊசிகளை எடுத்த நபர்களுக்கு வரும் குளிர்காலத்தில், கொரோனா தாக்காமல் இருக்க, மேலதிக பூஸ்டர் ஊசிகளை கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி முதலில் ஆஸ்ரா செனிக்கா ஊசி எடுத்த நபர்களுக்கு, இம் முறை ஃபைசர் ஊசிகள் பூஸ்டராக வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் பூஸ்டர் ஊசிகளை கட்டாயம் எடுக்க வேண்டுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
குளிர் காலத்தில் ஜுரம் வராமல் இருக்க, 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தொடர்ச்சியாக குளிர் காய்ச்சல் ஊசி வழங்கப்பட்டு வருகிறது.
அது போல ஒவ்வொரு வருடமும் இந்த கொரோனா பூஸ்டர் ஊசிகளை பாவிக்க வேண்டிய கட்டாய சூழ் நிலைக்கு மக்கள் தள்ளப்பட கூடும் என கூறப்படுகிறது.
இவ்வாறான நிலையில் தொடந்து ஊசி போட்டால், எமது இயற்கையான நோய் எதிர்ப்பு சக்திக்கு என்னாகும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.