போப் ஆண்டவரிடம் குறும்புத்தனம் செய்த சிறுவன்: அரங்கமே சிரிப்பலையில்
வாடிகனில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, போப் ஆண்டவரிடம் குறும்புத்தனம் செய்த சிறுவனின் செயல் வைரலாகி வருகிறது.
வாடிகனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர், அப்போது 10 வயது சிறுவன் மேடையில் ஏறி போப் ஆண்டவரிடம் சென்றான்.
அவனிடம் போப் ஆண்டவர் பேசிக்கொண்டிருந்த போது, துள்ளிக் குதித்து விளையாடினான், தொடர்ந்து போப் ஆண்டவரின் தொப்பி வேண்டுமென அடம்பிடித்தான்.
இதைக்கவனித்த நிகழ்ச்சியின் தலைவர், சிறுவனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார், தொடர்ந்து அந்த சிறுவன், மற்றொருவரை கையை பிடித்து அழைத்து வந்து போப் ஆண்டவரிடம் தொப்பியை வாங்கித் தருமாறு கேட்டதால் அரங்கில் சிரிப்பலை எழுந்தது.
இறுதியாக, என்ன செய்தாலும் இந்தச் சிறுவனை சமாதானம் செய்ய முடியாது என புரிந்துக்கொண்ட போப் ஆண்டவர், தனது தொப்பியை கொடுத்ததால், சிறுவனின் ஆசை நிறைவேறியது.
போப் ஆண்டவரின் தொப்பியை அணிந்துகொண்டு, மகிழ்ச்சியுடன் மேடையில் இருந்து இறங்கிய சிறுவனை அனைவரும் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.
சிறுவனின் இந்த குறும்புத்தனங்கள் எதையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோ, போப் ஆண்டவரின் பாதுகாவலர்களோ, தடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.