சிறார் ஆபாச காட்சிகள் தொடர்பில் சிக்கிய பிராம்ப்டன் இளைஞர்
பீல் பிராந்தியத்தில் சிறுவர் ஆபாச காட்சிகள் குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணை தொடர்பாக 25 வயது பிராம்ப்டன் நபர் மீது பொலிசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
பீல் பிராந்தியத்தில் சமூக ஊடகம் வாயிலாக சிறார் ஆபாச காட்சிகளை வெளியிட்டு வந்த அடையாளம் காணப்படாத நபர் தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் முதல் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலகட்டத்தில் பல்வேறு பெயர்களில் அந்த நபர் இணையத்தில் வலம் வந்ததாகவும், சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கண்டறியப்பட்டது.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மே 26 அன்று ஆதம் கான் என்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆதம் கானின் குடியிருப்பில் இருந்தே, சிறார் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் அவருக்கும் இந்த காப்பகத்திற்குமான தொடர்பு குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.