மெட்ரோ வான்கூவரில் மற்றொரு துணீகர சம்பவம்: நடுக்கத்தில் மக்கள்
வியாழக்கிழமை இரவு பர்னபி காக்டஸ் கிளப் உணவகத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் இன்னொருவர் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் அவரது நிலை தொடர்பில் தகவல் இல்லை எனவும் கூறப்படுகிறது.
இரவு சுமார் 8 மணி அளவிலேயே குறித்த உணவகத்தின் வெளியே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. தகவல் அறிந்து பொலிசார் மற்றும் மருத்துவ உதவிக்குழுவினருடன் ஹெலிகொப்டரிலும் கண்காணிக்கப்பட்டுள்ளது.
வாகனம் ஒன்றில் துப்பாக்கி கூண்டு துளைத்த நிலையில் காணப்பட்டுள்ளது. அந்த வாகனத்தின் அருகாமையில் சடலம் ஒன்று காணப்பட்டுள்ளது.
காயங்களுடன் தப்பிய ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரையும் ராயல் கொலம்பியன் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். அவர்களின் தற்போதைய நிலை தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றே கூறப்படுகிறது.
மெட்ரோ வான்கூவரில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருவதாக தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலும், போதைமருந்து கும்பல்களுக்கு இடையே நடக்கும் போட்டி என்றே கூறப்படுகிறது.
மே 3ம் திகதி 19 வயதேயான Toni Dalipi பர்னாபி பகுதியில் கொல்லப்பட்டதுடன், வழிபோக்கர் ஒருவர் காயமடைந்துள்ளார்.