மாஸ்க் கட்டாயம்... மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்த கனேடிய மாகாணம்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் மீண்டும் மாஸ்க் கட்டாயம் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நான்காவது அலையை எதிர்கொள்ளும் பொருட்டு, பொதுவெளியில், உள் அரங்குகளில் மாகாணம் முழுவதும் மாஸ்க் கட்டாயம் என பிரிட்டிஷ் கொலம்பியா அரசு அறிவித்துள்ளது.
இந்த உத்தரவானது ஆகஸ்டு 25, புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் பாடசாலைகள் திறப்பு தொடர்பான ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மாஸ்க் கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகள், நூலகங்கள், சமூக கூடங்கள், மதுபான விடுதிகள், வேலையிடங்கள் என மக்கள் அதிகமாக புழங்கும் பகுதிகளில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களே டெல்டா மாறுபாடு காரணமாக கொரோனா பாதிப்புக்கு இலக்காவதாக மாகாண சுகாதார அதிகாரி மருத்துவர் Bonnie Henry சுட்டிக்காட்டியுள்ளார்.
2 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மாஸ்க் கட்டாயம் அல்ல என குறிப்பிட்டுள்ள அவர், ஆனால் 2 முதல் 12 வயதுடையோர் பொதுவெளியில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என கோரியுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் மாஸ்க் கட்டாயமல்ல என அறிவித்து இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் மாஸ்க் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.