கொரோனா பிடியில் பிரித்தானியா: ஒரே நாளில் இத்தனை பேருக்கு தொற்றா!
பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 27ஆயிரத்து 734பேர் பாதிக்கப்பட்டதோடு 91பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஆறாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 57இலட்சத்து 70ஆயிரத்து 928பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஒரு இலட்சத்து 29ஆயிரத்து 430பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 11இலட்சத்து 60ஆயிரத்து 965பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 848பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 44இலட்சத்து 80ஆயிரத்து 533பேர் பூரண குணமடைந்துள்ளனர்.