பிரித்தானியாவில் நாளை முதல் இந்த விதிமுறையை மீறுவோருக்கு 6,400 பவுண்ட் அபராதம்
பிரித்தானியாவில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த விதிமுறைகளை மீறுவோருக்கு 6400 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவில் உருவான ஒமிக்ரோன் வைரஸானது தபோது பிரிட்டனில் 11 பேரை தாக்கியுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி முகக்கவசம் அணிவது காட்டாயம் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளானது, அதன் படி தற்போது அரசு சிறிய அளவில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால்,
அது எங்கெங்கு என்பதை பார்ப்போம். பொதுப் போக்குவரத்து(டாக்சிகள் உட்பட) மற்றும் மக்கள் அதிகம் கூடும் கடைகளில்.
மூடப்பட்ட ஷாப்பிங் மையங்கள் வங்கிகள் மற்றும் கட்டிட சங்கங்கள் ஓட்டுநர்கள் சோதனை செய்யும் இடங்கள் தபால் நிலையங்கள் மருந்தகங்கள் முடி மற்றும் அழகு நிலையங்கள் போன்றவைகளில் முகக்கவசம் கட்டாயம் அணியம் வேண்டும்.
இது போன்ற இடங்களில் முகக்கவசம் அணியாமல் அதிகாரிகளிடம் சிக்கினால் 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படுமாம்.
இந்த அபராதம் ஒவ்வொரு முறையும் சிக்கும் போது, இரட்டிப்பாகி 6,400 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முகக்கவசம் அணிய தேவையில்லாத இடங்கள் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகள் முகககவசம் அணிய தேவையில்லை.
உணவகங்கள் கபேக்கள் பார்கள் மற்றும் பப்களில் இந்த விதிகள் பொருந்தாது.
இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் நாளைஅதிகாலை உள்ளூர் நேரப்படி 4 மணி முதல் அமுலுக்கு வரும். அதன் பின் மூன்று வாரங்களுக்கு பின் குறித்த கட்டுப்பாடுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அதன் பின் புதிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் ஒரு சாதரண கிறிஸ்துமஸ் ஆகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.