அமெரிக்காவை தொடர்ந்து சட்டவிரோத குடியேறிகளை விரட்டும் பிரிட்டன்!
அமெரிக்காவில் டிரம்ப் அதிபராக பதவி ஏற்றதிலிருந்து, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் பிரிட்டனும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து வெளியேற்றி வருவதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், பிரிட்டனின் பிரதமர் கேர் ஸ்டார்மர் என்ற அமைப்பின் தலைமையில், அங்கு சட்டவிரோதமாக தங்கி இருந்த 19,000 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும், இன்னும் வெளியேற்றும் பணி தொடரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், பிரிட்டன் முழுவதும் உணவகங்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், வணிக வளாகங்கள், வாகனம் தூய்மை செய்யும் இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில், பலர் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், அகதிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை போலீசார் கைது செய்து, ஆவணங்களை சரிபார்த்த பின்னர் அவர்களின் நாட்டிற்கு நாடு கடத்த நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.