நடுவானில் குலுங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ்; பணிப்பெண்களுக்கு நேர்ந்த கதி!
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் விமானம் ஒன்று சிங்கப்பூரிலிருந்து லண்டன் செல்கையில் நடுவானில் பயங்கரமாக குலுங்கியபோது நிலைதடுமாறி விழுந்த பணிப்பெண்கள் இருவருக்கு கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மோசமான வானிலை
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் விமானம் வங்க கடல் மீது 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது மோசமான வானிலை காரணமாக பயங்கரமாக குலுங்கத் தொடங்கியது.
அதில் விமான பணிப்பெண்கள் 5 பேர் நிலைதடுமாறி விழுந்து காயமடைந்தனர். இதனை யடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் மீண்டும் சிங்கப்பூருக்கே திருப்பப்பட்டது.
கீழே விழுந்து காயமடைந்த இரு பணிப்பெண்களுக்கு கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதுடன் அதில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை கடந்த 40 ஆண்டுகளில் விமானம் குலுங்கும் நிகழ்வுகள் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.