இஸ்ரேலுக்கான விமான சேவைகளை நிறுத்திய பிரிட்டிஷ் ஏர்வேஸ்
பிரிட்டிஷ் ஏர்வேஸ் இஸ்ரேலுக்கான மற்றும் அங்கிருந்து வரும் விமானங்களை ஜூலை இறுதி வரை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஏமனை தளமாகக் கொண்ட ஹவுத்திகளிடமிருந்து ஏவுகணைத் தாக்குதல்கள் அதிகரித்து வரும் அச்சுறுத்தலால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானசேவைகளை நிறுத்தியுள்ளதாக கூறப்படுள்ளது.
பென் குரியன் விமான நிலையத்திற்கு அருகே ஹவுத்தி "ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை" தாக்கி எட்டு பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ், பல முக்கிய விமான நிறுவனங்களுடன் சேர்ந்து, இந்த மாத தொடக்கத்தில் டெல் அவிவ்வுக்கான விமானங்களை முதன்முதலில் நிறுத்தியது.
நேற்றையதினம் ஈரான் ஆதரவு பெற்ற குழு, பென் குரியன் விமான நிலையத்தை மீண்டும் ஏவுகணை மூலம் குறிவைத்ததாகக் கூறியது. இந்நிலையில் , இது 24 மணி நேரத்திற்குள் மூன்றாவது தாக்குதல் என சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன.