இந்த நாட்டிற்கு செல்லாதீர்கள்; பிரிட்டன் அரசு மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்
பிரித்தானிய மக்கள் இத்தாலி நாட்டிற்கு பயணிக்க வேண்டாம் என பிரிட்டன் வணிக அமைச்சர், எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரிட்டன் பயணிகள் தங்கள் நாட்டிற்குள் வருவதற்கு இத்தாலி அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் பிரிட்டன் வணிக அமைச்சரான Anne-Marie, மஞ்சள் பட்டியலில் இருக்கும் நாடுகளில் இத்தாலியும் ஒன்று. எனவே மக்கள் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
அதாவது அத்தியாவசிய காரணங்கள் இல்லாமல் மஞ்சள் பட்டியலில் உள்ள நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மஞ்சள் பட்டியலில் இருக்கும் நாடுகளுக்கு சென்ற மக்கள், பிரிட்டன் திரும்பிய பின் சுமார் பத்து தினங்களுக்கு தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுவர் என்றும்,
நாம் பாதுகாப்பாகவும், மெதுவாகவும் இத்தொற்றிலிருந்து மீண்டு வர வேண்டும். நாம் நிலையான பாதையில் முன்னேற வேண்டும் என்று Anne-Marie கூறியிருக்கிறார்.