15 வயது சிறுவனால் பிரித்தானிய எம்.பி இராஜினாமா!
15 வயது சிறுவனை துஷ்பிரயோகப்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் அஹமட் கான் (Imran Ahmad Khan) குற்றவாளியாக காணப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவர் (Imran Ahmad Khan) நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். 48 வயதான இம்ரான் அஹமட் கான், பிரிட்டனின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார் .
இவர் கடந்த 2019 ஆம் ஆண்டில், வேக்பீல்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக அவர் (Imran Ahmad Khan) தெரிவு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் 2008 ஆம் ஆண்டில் 15 வயதான ஒரு சிறுவனை துஷ்பிரயோகப்படுத்தியதாக 2021 ஆம் ஆண்டு இம்ரான் அஹமட் கான் (Imran Ahmad Khan) மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் இம்ரான் அஹமட் கான் (Imran Ahmad Khan) குற்றவாளி என சௌத்வாக் நகர நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக இம்ரான் அஹமட் கான (Imran Ahmad Khan) அறிவித்துள்ள நிலையில், வேக்பீல்ட் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.