பிராம்ப்டன் மேயருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தவர் கைது
கனடாவின் பிராம்ப்டன் நகர மேயர் பாக்ட்ரிக் பவுன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பீல் பிராந்திய பொலிஸார் அறிவித்துள்ளனர்.
29 வயதான கன்வர்ஜோத் சிங் மனோரியா, மரணம் அல்லது உடல் சேதம் ஏற்படும் வகையில் மிரட்டல் விடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுவாக விசாரணையை அறிந்த ஒரு ஆதாரத்தின்படி, மேயரின் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக இந்த அச்சுறுத்தல் வந்ததாகத் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து அச்சுறுத்தல்
அதில் அவரது மனைவியையும் 5 வயது மகனையும் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சந்தேகப்படுக்கப்படுபவர் ஸ்வீடனில் உள்ள ஒரு சர்வர் மூலம் தனது ஐபி IP முகவரியை மறைத்துள்ளார் எனவும் வெளிநாட்டிலிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக காண்பிக்க முயற்சித்துள்ளார் எனவும் மேயர் பிரவுன் தெரிவித்துள்ளார்.
நான் சமூக பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விஷயங்களில் திறந்தவையாக பேசியுள்ளேன். எனவே இந்த அச்சுறுத்தல், என் கருத்துரைகளைத் தொடர்ந்து வந்ததால்தான் பொலிஸார் அதை கடுமையாக எடுத்துக்கொண்டனர் என குறிப்பிட்டுள்ளார்.
அச்சுறுத்தலுக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
ஆனால், கடந்த மாதம் மேயர் பவுன், இந்தியாவைச் சேர்ந்த ‘லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை’ தீவிரவாத அமைப்பாக அங்கீகரிக்கவேண்டும் என்று கனடா மத்திய அரசிடம் கோரியதன் பின்னர் இந்த மிரட்டல் வந்திருக்கலாம் என சிலர் சந்தேகிக்கின்றனர்.
அதே நேரத்தில், இலங்கைத் தமிழர் சமூகத்திற்கு அவரால் வழங்கப்பட்ட ஆதரவுடன் இந்த மிரட்டலுக்கு தொடர்பில்லை என்று விசாரணை தொடர்புடைய ஒரு ஆதாரம் உறுதி செய்துள்ளது.