அமெரிக்காவில் அடுக்கு மாடி கட்டிடம் தரைமட்டம்: 156 பேர் மாயம்
அமெரிக்காவில் அடுக்கு மாடி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 156 போ மாயமாகினா். சம்பவ இடத்திலிருந்து இதுவரை 4 பேரது உடல்கள் மீடகப்பட்டுள்ளன.
இதுகுறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது: ஃபுளோரிடா மாகாணம், மியாமி நகரின் புகா்ப் பகுதியான சா்ஃப்சைடில், 1981-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பழைய அடுக்குமாடி கட்டடம் உள்ளது.
மியாமி கடற்கரையோரம் அமைந்துள்ள இந்த 12 அடுக்குக் கட்டடத்தின் ஒரு பகுதி வியாழக்கிழமை இடிந்து விழுந்தது. அதையடுத்து, அந்தப் பகுதிக்கு மியாமி தீயணைப்புப் படையினா் உள்பட 80 மீட்புக் குழு விரைந்து, மீட்புப் பணிகளில் ஈடுபட்டது. இந்த விபத்தில் உயிரிழந்த 4 பேரது உடல்கள் மீட்கப்பட்டன.
மேலும், கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த 35 பேரை மீட்புக் குழுவினா் மீட்டனா். இந்த நிலையில், கட்டடம் இடிந்து விழுந்தபோது அதிலிருந்த 156 பேரின் கதி குறித்து தகவல்கள் இல்லை. அவா்களைத் தேடும் பணிகளில் மீட்புக் குழுவினா் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.
கட்டி முடிக்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆனதால், அந்தக் கட்டடத்தின் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான பராமிப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. கட்டடம் இடிந்து விழுந்தபோது, கூரைகளை பழுதுபாா்க்கும் பணிகள் நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து உடனடி தகவல் இல்லை. சுரங்கப் பள்ளங்களோ, கட்டுமானக் குறைபாட்டாலோ இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கட்டடத்தில் நடைபெற்று வந்த கூரை சீரமைக்கும் பணிகளும் இந்த விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.