நடுங்க வைத்த துப்பாக்கிச் சத்தம்... குற்றுயிராக மீட்கப்பட்டவர் மரணம்: பொலிசார் கூறிய காரணம்
பிரிட்டிஷ் கொலம்பியாவின் பர்னாபி பகுத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பர்னாபி பகுதியில் 12 மற்றும் 13 வது அவென்யூ இடையே 6 வது தெருவில் இரவு 7 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து காயங்களுடன் மீட்கப்பட்ட நபர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் விரிவான தகவல் எதையும் பொலிசார் வெளியிட மறுத்துள்ளனர். பெரும்பாலும் போதைமருந்து மற்றும் அதனுடன் தொடர்புடைய கும்பல்களாலையே துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறுவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
6 நாட்களுக்கு முன்னர் பர்னாபி பகுதியில் 25 வயதான பெண் மீது துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில் 43 வயதான நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மட்டுமின்றி மார்ச் மாத மத்தியில் உடல் மொத்தமும் கருகிய நிலையில் பெண் ஒருவரின் சடலத்தை பூங்கா ஒன்றில் இருந்தும் பொலிசார் மீட்டுள்ளனர்.