கனடாவில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவம்;53 பேர் வைத்தியசாலையில்
கனடாவில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவத்தில் 53 பேர் காயமடைந்துள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் தென் பகுதியில் அமைந்துள்ள அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் இவ்வாறு 53 பேர் காயமடைந்துள்ளனர்.
மெரிட் – கெலவ்னா பகுதியில் அமைந்துள்ள 97சீ அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டமைக்கான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
எனினும் விபத்தில் காயமடைந்த 53 பேர் அருகாமையில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்பில் சுகாதார தரப்பினர் அதிகாரபூர்வமான எந்தவிதமான தகவல்களையும் வெளியிடவில்லை.