பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பேருந்து விபத்து; 27 பேர் உயிரிழப்பு
மெக்சிகோவில் பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
மெக்சிகோ தெற்கு மாநிலமான ஒசாகா மலைப்பாதையில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது செங்குத்தான குன்றின் அடிப்பகுதியில் வாகனத்தின் சிதைந்த பாகங்கள் கிடப்பதாக தெரிவித்துள்னர்.
முதற்கட்ட எண்ணிக்கையின்படி 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 17 காயமடைந்தவர்கள் மருத்துவ கவனிப்புக்காக பிராந்தியத்தில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஒசாகா மாநில வழக்கறிஞர் பெர்னார்டோ ரோட்ரிக்ஸ் அலமில்லா தெரிவித்துள்ளார்.