ஒன்ராறியோவில் ஓடும் வாகனத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சாரதி: அடையாளத்தை வெளியிட்ட பொலிசார்
ஒன்ராறியோவில் ஓடும் வாகனத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சாரதியின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
எக்ளிண்டன் அவென்யூ கிழக்கு பகுதியில் ஞாயிறன்று இரவு சுமார் 8.48 மணிக்கு சாலை விபத்து தொடர்பில் ரொறன்ரோ பொலிசாருக்கு தகவல் சென்றுள்ளது.
தகவலையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், டெக்ஸி ஒன்றில் சாரதி மயக்கமான நிலையில் இருந்துள்ளார். மட்டுமின்றி துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் காயங்கள் காரணமாக அவர் மருத்துவமனையிலேயே மரணமடைந்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், ரொறன்ரோவை சேர்ந்த 73 வயதான Christopher Jung என்பவரே, துப்பாக்கியால் சுடப்பட்டவர் என தெரிய வந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக Beck டெக்ஸி நிறுவனத்தில் அவர் சாரதியாக பணியாற்றி வந்துள்ளார்.
இதனிடையே, கருப்பு உடை அணிந்த ஒருவர், சம்பவ பகுதியில் இருந்து மாயமானதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், ரொறன்ரோவில் இயங்கும் வாடகை டெக்ஸி அனைத்திலும், கமெரா பொருத்தப்பட்டுள்ளதாகவும், அதில் பதிவாகியிருக்கும் காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.