கல்கரி பெண்மணி தொடர்பில் புகைப்படம் வெளியிட்ட பொலிஸ்
கல்கரியில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் மாயமான பெண்மணி தொடர்பில் மீண்டும் புகைப்படம் வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸ்.
கடந்த 2018 ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே 51 வயதான Lisa MacEachern மாயமானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவர் தொடர்பில் விசாரித்து வந்த கல்கரி பொலிசார், சமீபத்தில் மாயமானவர்கள் பட்டியலை வெளியிட்டு, அதில் Lisa MacEachern குறித்தும் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர்.
இதுபோன்ற வழக்குகளில் பொதுவாக விசாரணையை முடித்துக் கொள்வது இல்லை எனவும், ஆனால் போதிய தகவல் இல்லாமலும், விசாரணையை முன்னெடுத்துச் செல்ல ஆதாரம் இல்லாமலும் தாமதமாகலாம் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்குகளை மீண்டும் பொதுமக்களிடம் கொண்டு சென்றால், கண்டிப்பாக தீர்வு கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.