வெளிநாடொன்றில் நடந்த பயங்கர துப்பாக்கிச்சூடு: இந்தியர் உட்பட 9 பேருக்கு நேர்ந்த பரிதாபம்!
கலிபோர்னியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்தியர் உட்பட 9 பேர் பலியாகினர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சான் ஜோஸ் பகுதியில் ரயில் நிலையம் உள்ளது.
இங்கு நேற்று முன் தினம் துப்பாக்கி ஏந்தி வந்த ஒரு மர்ம நபர் கண்மூடித்தனமாக அனைவரையும் சுட்டான். காலை 7 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பலியான 9 பேரில் இந்தியாவை சேர்ந்த டப்தெஜ்தீப் சிங்கும் ஒருவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் கலிபோர்னியாவில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
36 வயதான சிங், துப்பாக்கிச்சூடு நடந்த ரயில் நிலையத்தில் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வந்தார். 'எல்லோருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர் டப்தெஜ்தீப் சிங். எல்லோர் மீதும் அக்கறை கொண்டவர்.
உண்மையில் அவர் ஒரு கதாநாயகன். துப்பாக்கிச்சூடு நடந்தபோதும் கூட ஒரு பெண்மணியை படியின் வழியே தப்பிக்க உதவியிருக்கிறார்' என்று அவருடன் பணிபுரிந்தவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.