கனடாவில் மீண்டும் தீவிரம் காட்டும் கொரோனா: ஒரே நாளில் 169 பேர் பலி
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 18 ஆயிரத்து 58 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 169 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து கனடாவில் 28 இலட்சத்து 38 ஆயிரத்து 456 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 31 ஆயிரத்து 994 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
கனடாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 3 இலட்சத்து 17 ஆயிரத்து 382 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 1,130 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரத்து 765 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 24 இலட்சத்து 60 ஆயிரத்து 161 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.