கொரோனா தொடர்பில் மக்களுக்கு கனடா பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்!
கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ் விடயம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பூசி ஏற்றுகை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் இந்த ஆண்டிலும் தொடர்ச்சியாக முனைப்பு காட்டப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வதிவிடப் பாடசாலைகளில் அடையாளம் காணப்படாத புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டமை உள்ளிட்ட தேசிய ரீதியான பிரச்சினைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலநிலை மாற்றம் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார்.