ஆப்கானிஸ்தானில் இருந்து 1,100 பேரை வெளியேற்றிய கனடா
ஆப்கானிஸ்தானில் இருந்து 1,100 பேரை இதுவரை கனடா, பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளதாக குடிவரவு அமைச்சர் மார்கோ மெண்டோசினோ (Marco Mendicino) தெரிவித்துள்ளார்.
அத்துடன் தலிபான்கள் காபூலைக் கைப்பற்றுவதற்கு முன்பாக வெளியேதாகவும் அவா் கூறினார். 12 இராணுவ விமானங்களில் 1,100 பேரை ஆயுதப் படையினர் பாதுகாப்பாக மீட்டு கொண்டுவந்துள்ளதாகவும் அமைச்சர் மார்கோ மெண்டோசினோ (Marco Mendicino) குறிப்பிட்டார்.
ஆகஸ்ட்-04 முதல் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் கனடாவிற்கு வரத் தொடங்ய நிலையில் கடந்த வியாழக்கிழமைக்குப் பின்னர் மட்டும் 3 விமானங்களில் 400 மேற்பட்டோரை கனடா ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றியுள்ளது.
ஆகஸ்ட் 19-ஆம் திகதி 175 ஆப்கானியர்கள் மற்றும் 13 வெளிநாட்டினரை ஏற்றிக்கொண்டு கனேடிய விமானம் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. வெள்ளிக்கிழமை 106 பேர் வெளியேற்றப்பட்டனர்.
மேலும் சனிக்கிழமை 121 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர் எனவும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மெண்டோசினோ (Marco Mendicino) தெரிவித்தார்.