கனேடிய சுகாதார அமைச்சர் ஏற்பட்ட நிலை... 10 நாட்களாக தனிமையில்!
கனடாவின் சுகாதார அமைச்சர் ஜீன்-யவ்ஸ் டுக்லோஸ், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சனிக்கிழமை காலை அறிவித்துள்ளார்.
பொது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, அடுத்த 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வதாகவும் அமைச்சர் ஜீன்-யவ்ஸ் டுக்லோஸ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உள்ளூர் சூழ்நிலைகள் காரணமாக தனிமைப்படுத்தல் தேவைகள் கனடா முழுவதும் பரவலாக வேறுபடுகின்றன.
பெரும்பாலான மாகாணங்களில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தல் போதுமானதாக கூறப்படுகிறது.
This morning, I tested positive to COVID-19. As per public health guidelines, I will be isolating for 10 days.
— Jean-Yves Duclos (@jyduclos) June 4, 2022
ஆனால் அதிக சிக்கல் கொண்ட சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு 10 நாட்கள் தனிமைப்படுத்துதல் தேவை என கூறப்படுகிறது.
கனடாவில் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதாகவே தெரிய வந்துள்ளது.