செவிலியர்கள் பற்றாக்குறையால் தத்தளிக்கும் கனடாவில் பேரிடியாக வெளியான அறிக்கை
கனடாவில் பெரும்பாலான மாகாணங்களில் செவிலியர்கள் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த மூன்றாண்டுகளில் இன்னும் தீவிரமடையும் என்றே ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
கனடாவில் அடுத்த மூன்றாண்டுகளில் நான்கில் ஒரு செவிலியர் பணியை துறக்க இருப்பதாகவும், வேறு பணிக்கு செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் 95 சதவீத சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தொற்றுநோய் தங்கள் மன ஆரோக்கியத்தை பாதித்துள்ளதாகவும், அவர்களின் வேலை-வாழ்க்கை சமநிலையில் மன அழுத்தத்தை அதிகரித்துள்ளதாகவும் கருதுகின்றனர்.
கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது, பெரும்பாலானா செவிலியர்கள் பல மணி நேரம் ஓய்வின்றி உழைக்கும் நிலை ஏற்பட்டது. மட்டுமின்றி, குடும்பத்துடன் செலவிடும் அல்லது விடுமுறைக்கு செல்லும் காலம் நீட்டிக்கப்பட்டது.
மேலும், நோயாளிகளுக்கு தரவேண்டிய கவனிப்பில் மாற்றம் ஏற்பட்டது. இந்த காரணிகளால் பெரும்பாலான செவிலியர்கள் தங்கள் பணியை விட்டுவிட்டு, வேறு பணிக்கு முயற்சிக்க முடிவு செய்துள்ளனர்.
கனடாவில் தற்போது பணியில் இருக்கும் செவிலியர்களில் 24.4 சதவீதத்தினர் தங்கள் வேலையை விட்டுவிடும் முடிவுக்கு வந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
செவிலியர்கள் எவரும் வேலை நெருக்கடி காரணமாக ஓய்வு பெறும் மன நிலையில் இல்லை எனவும், ஆனால் செவிலியர் பணியை விட்டுவிடவே முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொற்றுநோய் பரவலுக்கு முன் இருந்ததை விடவும் உளவியல் பாதிப்பு மிக மோசமாக இருப்பதாக 46.4% மருத்துவர்களும் 52.4% செவிலியர்களும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சுகாதாரத்துறையில் மட்டும் வேலைவாய்ப்பு 126,000 எனவும், எதிர்வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.