பைசரின் கொரோனா மாத்திரைக்கு அனுமதி வழங்கிய கனடா!
பைசர் நிறுவனத்தின் கொரோனா மாத்திரை பயன்பாட்டுக்கு கண்டா சுகாதாரப் பிரிவினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஓமிக்ரோன் திரிபு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனா தடுப்பு மாத்திரை பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், Paxlovid என்னும் இந்த மாத்திரையை சிறிதளவில் நோய் குறியுடைய கொரோனா நோயாளர்களுக்கான சிகிச்சைகளுக்காக பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய திரிபுகளின் சவால்களை எதிர்நோக்கி வரும் நிலையில் இந்த மாத்திரை அறிமுகம் செய்யப்படுவதாக கனடா சுகாதார திணைக்களத்தின் பிரதம ஆலோசகர் வைத்தியர் சுப்ரியா ஷர்மா (Supriya Sharma) தெரிவித்துள்ளார்.