கனடாவில் பள்ளி அருகே துப்பாக்கியுடன் சுற்றிய இளைஞரை சுட்டுக்கொன்ற பொலிஸார்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளிக்குள் 18 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டு 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவில் அண்டை நாடான டொராண்டோவில் உள்ள தொடக்கப்பள்ளி அருகே துப்பாக்கி ஏந்தியபடி இளைஞர் ஒருவர் நடந்து சென்றுள்ளார்.
அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள 3 தொடக்கப்பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டன. இதையடுத்து உடனடியாக அங்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கியுடன் நடந்து வந்த நபரை சுற்றி வளைத்தனர். பின்னர் போலீசார் அந்த நபரின் தலையில் சுட்டனர்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.