இன்னும் சில நாட்களில்... எல்லைக் கட்டுப்பாடுகளை நெகிழ்த்த கனடா திட்டம்
முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட பயணிகளுக்கு எல்லைக் கட்டுப்பாடுகளை நெகிழ்த்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டமிட்டுவருவதாக பிரபல பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது கனடாவுக்கு வரும் பயணிகள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது. இந்த கட்டுப்பாட்டை நெகிழ்த்த கனடா திட்டமிட்டுவருவதாக Bloomberg என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.
அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின்படி தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு நெகிழ்த்தப்பட்டாலும், கனடாவுக்கு வரும் பயணிகள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளத்தான் வேண்டும். தனிமைப்படுத்தப்படும் நாட்கள் குறைக்கப்படலாம்.
இதுபோக, Politico என்ற பத்திரிகை, அமெரிக்க எல்லையுடனாக கட்டுப்பாடுகள் ஜூன் மாதம் 22ஆம் திகதி முதல் நெகிழ்த்தப்படலாம் என தெரிவித்துள்ளது.
திட்டமிட்டபடி தடுப்பூசி திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், கனடாவுடனான எல்லைக் கட்டுப்பாடுகள் ஜூன் 22ஆம் திகதி முதல் நெகிழ்த்தப்படும் என ட்ரூடோ அரசு சூசகமாக தெரிவித்துள்ளதாக Politico தெரிவித்துள்ளது.