அமெரிக்கா விதித்த வரிகள் ‘நியாயமற்றவை’ என்ற நம்பிக்கையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது – கனடா
அமெரிக்கா விதித்த மிகப்பெரிய வரிகள் “நியாயமற்றவை” என்ற கனடிய நம்பிக்கையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதாக கனடியா சர்வதேச வர்த்தக அமைச்சர் டொமினிக் லீபிலான்க் தெரிவித்தார்.
அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக கனடிய உற்பத்தியாளர்களுக்கு எதிராக பல துறைகளில், குறிப்பாக எஃகு, அலுமினியம் மற்றும் கார்கள் போன்ற முக்கிய உற்பத்தித் துறைகளில் அதிக வரிகளை விதித்து வருகிறது.
இது கனடிய பொருளாதாரத்தில் பல்வேறு சிக்கல்களை உண்டாக்கியதாகக் கூறப்படுகிறது. “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கனடிய வர்த்தகர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது.

அதே சமயம், சில துறைகளில், குறிப்பாக எஃகு, அலுமினியம் மற்றும் கார்கள் போன்றவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட வரிகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அவற்றை மாற்ற நடவடிக்கைகள் தொடர்வதாகவும்” அவர் கூறினார்.
அவர் மேலும், கனடா, அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்படும். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் தொழில்துறை, வர்த்தக மற்றும் முதலீட்டு முன்னேற்றத்திற்கு நன்மை செய்யும் வகையில் செயல்படுவோம்” என உறுதி செய்தார்.
இந்த தீர்ப்பின் மூலம் கனடிய தொழில்துறைகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் வர்த்தக உறவுகளை முறையாக சமநிலைப்படுத்தும் வழி திறக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.