கனடா ஸ்காபரோ மார்க்கம் வீதியில் விபத்து ; ஒருவர் உயிரிழப்பு
கனடாவில் தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபரோவில் உள்ள மார்க்கம் வீதியில் இரவு TTC பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டொராண்டோ பொலிஸாரின் கூற்றுப்படி, 32 வயதுடைய நபர் திங்கட்கிழமை மதியம் 12:49 மணியளவில் Markham Road மற்றும் Blakemanor Boulevard அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பயணிகளை ஏற்றிக்கொண்டு வடக்கு நோக்கிச் சென்ற TTC பேருந்து ஒன்றே சாலையால் சென்றவரை மோதியுள்ளது. விபத்தில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் லாரா பிரபாண்ட் கூறினார்.
அதேவேளை நகரின் இந்த ஆண்டின் 24வது போக்குவரத்து மரணமாகும். பொலிஸ் தரவுகளின்படி, அந்த இறப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பாதசாரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரத்தில் கடந்த ஆண்டு 63 போக்குவரத்தின் போது ஏற்பட்ட விபத்துகளினால் இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில் அவர்களில் 29 பேர் பாதசாரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.