இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டும் கனடா: வெளியான முக்கிய அறிவிப்பு
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை படுதீவிரமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல், ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் இறப்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
உலகின் பல நாடுகளும் இந்தியாவுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன்வந்துள்ள நிலையில், 10 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.
அதாவது, இந்திய ரூபாயின் மதிப்பில் 60 கோடி ரூபாய் பணம் வழங்குகிறது, கனடா செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் இந்திய செஞ்சிலுவை சங்கத்துக்கு வழங்கப்படுகிறது.
இந்த பணத்தை கொண்டு ஆம்புலன்கள், PPE கிட்கள் மற்றும் இதர பொருட்கள் வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கனடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், இந்தியாவிலிருந்து வெளியாகும் புகைப்படங்களால் நாங்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறோம், எங்கள் நண்பர்களுக்காக நாங்கள் என்றும் இருக்க வேண்டும், எங்களால் முடிந்தளவு இந்தியாவுக்கு ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான Marc Garneau, இந்திய அமைச்சரான S Jaishankar-வுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.