கனடாவில் காணாமல் போன 32 வயது தமிழ் இளைஞன்!
கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார். 32 வயதான சுதர்சன் நிதி என்பவரே காணாமல் போயுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளார்கள்.
குறித்த இளைஞர் மார்க்கம் பகுதியில் இருந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் யார்க் பிராந்திய காவல்துறை, 5 மாவட்ட குற்றப்பிரிவு புலனாய்வுப் பிரிவின் புலனாய்வாளர்கள் மார்க்கம் நகரிலிருந்து காணாமல் போன குறித்த இளஞரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்.
காணமல்போன இளனஜ்ர் சுதர்சன் நேத்தி கடைசியாக ஜூலை 28, 2021 புதன்கிழமை இரவு 10:45 மணியளவில் காணப்பட்டுள்ளார் என்றும், அவர் யேல் லேன், நார்த்வேல் சாலை மற்றும் ஒன்பதாவது கோடு பகுதியில் உள்ள தனது குடியிருப்பை விட்டு வெளியே சென்ற பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் , அவரது குடும்பத்தினர் மற்றும் போலீசாரால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படும் நிலையில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
32 வயதான சுதர்சன் நீத்தி, 5'6 " உயரமும் , பக்கங்களில் குறுகிய, கருமையான முடி, முழு தாடி மற்றும் மீசை கொண்டவர் என்றும், கடைசியாக அவர் நீல நிற நீளமான சட்டை அணிந்து பின்புறத்தில் சிறகுகள், பழுப்பு நிற காக்கி பேன்ட் மற்றும் கருப்பு உயரமான ஜோர்டான் ஓடும் காலணி அணிந்து காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இளைஞர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் யார்க் பிராந்திய 5 மாவட்ட குற்ற புலனாய்வு பணியகத்தை தொடர்பு கொள்ளுமாறும் கேட்கப்படுகிறது.