ஆப்கானிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ள கனடா: வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்
ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் கனேடிய குடிமக்கள் மற்றும் காபூலிலிருந்து வெளியேற முயற்சிக்கும் ஆப்கன் அகதிகளை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பாக தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து கனேடிய குடிமக்களையும் காபூலிலிருந்து வெளியேற முயற்சிக்கும் ஆப்கன் அகதிகளையும் வெளியேற்ற அனுமதிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்த இருப்பது குறித்த தகவலை உறுதி செய்த கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சரான Marc Garneau, ஆனால், பதிலுக்கு தாலிபான்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பது தெரியவில்லை என்றார்.
ஆனாலும், வரும் நாட்களில் தாலிபான்களுடன் பேச இருக்கும் விடயங்களில் இதற்குத்தான் முன்னுரிமை என்றார் அவர்.
இரண்டாவது விடயம் என்னவென்றால், கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் உதவியுடன் காபூல் விமான நிலையத்திலிருந்து பயணிகள் விமானங்களை இயக்குவது தொடர்பிலான பேச்சுவார்த்தையாகும் என்கிறார் Garneau.