நூற்றுக்கணக்கான டொலர்கள் செலவு செய்து விமானத்தில் அமெரிக்காவுக்கு செல்லலாமாம்... காரில் செல்லக்கூடாதாம்: கனேடியர்கள் கோபம்
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், கொரோனாவைக் காரணம் காட்டி கனடாவும் அமெரிக்காவும் தங்களுக்கிடையிலான எல்லையை மூடுவது என முடிவு செய்தன.
ஆனால், கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்று காட்டினாலே விமானத்தில் அமெரிக்கா வரலாம் என அமெரிக்கா அனுமதிக்க, கனேடிய செல்வந்தர்கள் மட்டும் ஜாலியாக அமெரிக்கா சென்று வந்தார்கள்.
ஆகத்து மாதம் 9ஆம் திகதி முழுமையான தடுப்பூசி பெற்ற அமெரிக்கர்கள் கனடாவுக்குள் வரலாம் என கனடா அறிவித்தது. பதிலுக்கு அமெரிக்காவும் அப்படியே செய்யும் என கனடா எதிர்பார்க்க, அமெரிக்காவோ, கனேடியர்கள் அமெரிக்காவுக்கு வரலாம், ஆனால் விமானம் வாயிலாக மட்டுமே வரலாம், காரில் வர முடியாது என்று கூறிவிட்டது.
உதாரணமாக, எல்லைக்கருகில் வாழும் கனேடிய பெண்ணான Birgit Heinbach, அமெரிக்காவிலுள்ள தன் கணவர் வீட்டுக்கு 45 நிமிடங்களில் நடந்தே சென்றுவிட முடியும் என்று இருக்கும் நிலையில், எல்லை விதிகள் காரணமாக செலவு செய்து விமானத்தில் கணவர் வீட்டுக்கு செல்கிறார்.
Birgit Heinbach, கனடாவின் சர்ரேயில் வாழ்கிறார். அவரது கணவருடைய வீடு எல்லைக்கப்பால் வாஷிங்டனிலுள்ள Blaine என்ற இடத்தில் உள்ளது.
வழக்கமாக Birgit நடந்தே கணவர் வீட்டுக்குச் சென்றுவிடுவார். ஆனால் இப்போது கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான எல்லை மூடப்பட்டுள்ளது. காரில் அமெரிக்காவுக்குள் செல்ல அனுமதி இல்லை. ஆனால், விமானத்தில் செல்லலாம். அதுவும் Birgitஐப் பொருத்தவரை, அவர் வான்கூவரிலிருந்து சியாட்டிலுக்கு ஒரு விமானம், சியாட்டிலிலிருந்து Bellinghamக்கு மற்றொரு விமானம் பிடித்து செல்லவேண்டும். இதிலேயே முக்கால் நாள் சென்றுவிடும்.
To minimize the spread of #COVID19, including the Delta variant, the United States is extending restrictions on non-essential travel at our land and ferry crossings with Canada and Mexico through September 21, while continuing to ensure the flow of essential trade and travel.
— Homeland Security (@DHSgov) August 20, 2021
அதாவது, 45 நிமிடங்களில் நடந்தே செல்லக்கூடிய என் கணவர் வீட்டுக்கு செல்வதற்கு, நான் ஒரு நாளின் பெரும்பகுதியை செலவிட்டு, இரண்டு விமானங்கள் பிடித்து பெரும் தொகையும் செலவு செய்து செல்லவேண்டியிருக்கிறது, இது சுத்த பைத்தியக்காரத்தனம் என்கிறார் Birgit.
கனேடியர்கள் பலரின் மன நிலைமையும் இப்படித்தான் இருக்கிறது.
குறிப்பாக, தம்பதியரில் ஒருவர், அல்லது குடும்பத்தாரில் சிலர் அமெரிக்காவிலும், மற்றவர் அல்லது மீதமுள்ள குடும்பத்தினர் கனடாவிலும் இருக்கும் நிலையில், இந்த கட்டுப்பாடு தங்கள் அன்றாட வாழ்வை பாதிப்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
In coordination with public health and medical experts, DHS continues working closely with its partners across the United States and internationally to determine how to safely and sustainably resume normal travel.
— Homeland Security (@DHSgov) August 20, 2021
குறைந்தபட்சம் செப்டம்பர் 21 வரையில் அத்தியாவசியமற்ற பயணத்துக்காக எல்லையை திறப்பதில்லை என அறிவித்துள்ளது அமெரிக்கா.
அமெரிக்காவுக்கு விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படும் நிலையில், ஏன் காரில் வர அனுமதிக்கக்கூடாது என கோபக்குரல் எழுப்பி வருகிறார்கள் கனேடியர்கள்.