கனடாவில் 19ம் திகதி அறிவிக்கப்பட்ட விடுமுறை ; வங்கிகள் இயங்குமா?
காலஞ்சென்ற பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 19ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், கனடாவில் சமஷ்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இந்த விடுமுறை குறித்து அறிவித்திருந்தார். எனினும்,இந்த விடுமுறை தொடர்பில் மக்கள் மத்தியில் சில சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதனை அவதானிக்க முடிகின்றது.
சில மாகாணங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்ட போதிலும் சில மாகாணங்களில் துக்கதினம் அறிவிக்கப்பட்ட போதிலும், விடுமுறை அறிவிக்கப்படவில்லை.
இவ்வாறான ஓர் பின்னணியில் கனடாவின் வங்கிகள் எதிர்வரும் 19ம் திகதி வழமை போன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய வங்கியாளர் ஒன்றியம் இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு இரங்கல் வெளியிடும் வகையில் மௌன அஞ்சலி செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
எனினும் வங்கிகள் மூடப்படாது எனவும் வழமை போன்று வங்கி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
வங்கிகள் எவ்வாறு இயங்கும் என்பதனை அறிந்து கொள்ள அந்தந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது.
கனேடியர்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நோக்கில் இவ்வாறு வங்கி நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுக்கத் தீர்மானித்ததாக வங்கியாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பிரதமர் அறிவித்த சமஷ்டி விடுமுறை சமஷ்டி அரசாங்க பணியாளர்களுக்கு மட்டும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமஷ்டி அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்படும் விமான சேவை நிறுவனங்கள், தபால் சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் இந்த சமஷ்டி விடுமுறை பொருந்தாது எனவும், நிறுவனங்கள் தேவை என்றால் விடுமுறை அறிவிக்க முடியும் எனவும் தொழில் அமைச்சர் சிமொஸ் ஓ றேகன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.