கனேடியரை உடனடியாக வெளியேற உத்தரவிட்ட தீவு நாடு
இந்தோனேசியாவின் பாலி தீவில் யோகா பயிற்சி அளித்து வந்த கனேடியரை உடனடியாக வெளியேற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் பாலி தீவில் பாலியல் உணர்வை தூண்டும் யோகா பயிற்சி அளிப்பதாக கூறி வாடிக்கையாளர்களை திரட்டியுள்ளார் கனேடியர் ஒருவர்.
இந்த நிலையில் உள்ளூர் மரபுகள் மற்றும் மதிப்புகளுக்கு அவமரியாதை செய்ததாக கூறி கனேடியரான கிறிஸ்டோபர் கைல் மார்ட்டின் என்பவர் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
இவர் இதற்கு முன்னரும் 30 டொலர் கட்டணத்தில் வித்தியாசமான இணையம் வழியான யோகா பயிற்சி ஒன்றையும் விளம்பரப்படுத்தியுள்ளார்.
அவரின் விளம்பரமானது இந்தோனேசியாவில் பெரும் வரவேற்பை பெற்றதுடன், உள்ளூர் மக்களிடையே, கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
இத்தகைய நடவடிக்கைகள் பிரபல விடுமுறை இடங்களாக கொண்டாடப்படும் இந்தோனேசியா மற்றும் பாலி தீவின் நற்பெயரை சேதப்படுத்தும் என எதிர்ப்பு கிளம்பியது.
இருப்பினும், மார்ட்டின் தொடர்பில் கரிசனம் காட்டியுள்ள ஆளுநர், நீங்கள் எப்போதாவது திரும்பி வர விரும்பினால், எங்கள் பழக்கவழக்கங்களை நீங்கள் மதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்துக்கள் பெரும்பான்மை கொண்ட இந்தோனேசியாவில் சுற்றுலா விசாவில் கடந்த ஏப்ரல் மாதம் மார்ட்டின் சென்றுள்ளதாகவும், அவரது பழக்கவழக்கங்களால் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற ஆணை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தமது யோகா பயிற்சியானது பாலியல் தொடர்பானது அல்ல எனவும் மூச்சுப்பயிற்சி அளிப்பதாகவும் எனவும் விளக்கமளித்துள்ளார் மார்ட்டின்.