கனேடிய நாடாளுமன்றம் திடீரென கலைப்பு: காரணம் என்ன?
கனடா கொரோனாவின் நான்காவது அலையின் துவக்கத்தில் இருக்கும் நிலையில், கனேடிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கோரிக்கையின்பேரில், கனடாவின் கவர்னர் ஜெனரலான மேரி சைமன் நாடாளுமன்றத்தைக் கலைக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
விடயம் என்னவென்றால், கனடாவில் தேர்தலுக்கு இன்னமும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், பிரதமர் ட்ரூடோ முன்கூட்டியே தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளார். அதன்படி, அடுத்த மாதம், செப்டம்பர் 20 அன்று, கனடாவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
கொரோனாவிலிருந்து நாட்டை மீட்பதற்கான தனது அரசின் திட்டத்தை வாக்காளர்கள் அங்கீகரிக்கிறார்களா என்பதை உறுதி செய்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இந்த கொரோனா பரவல் நேரத்தில் ட்ரூடோ தேர்தலை அறிவித்துள்ளதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
கருத்துக்கணிப்புகளில் முன்னணியிலிருக்கும் ட்ரூடோ, அதை பயன்படுத்திக்கொண்டு தனது மைனாரிட்டி அரசை மெஜாரிட்டி ஆக்குவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.