கனேடிய மக்களில் எத்தனை சதவீதம் பேர் தடுப்பூசி பெற்றுக்கொண்டார்கள்: வெளியான தகவல்
கனேடிய மக்கள் தொகையில் சரிபாதி பேர் கொரோனா தடுப்பூசியின் குறைந்தபட்சம் ஒரு டோஸ் பெற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் சனிக்கிழமை வரையில் மொத்தம் 20,328,984 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது மொத்த மக்கள் தொகையில் 50.01% மக்கள் தடுப்பூசியின் ஒரு டோஸ் ஆவது பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த சாதனையானது கனேடிய நிர்வாகம் முதல் டோஸ் அளிக்கப்பட்ட 5 மாதங்களில் செயல்படுத்தியுள்ளது. கனடாவின் தற்போதைய மக்கள் தொகை 37.7 மில்லியன் ஆகும்.
தற்போது 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி அளிக்கும் நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. மேலும் மொத்தமுள்ள மக்கள் தொகையில் 4% மக்கள் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
கடந்த 2020 டிசம்பர் 9ம் திகதி கனேடிய சுகாதாரத்துறை முதன் முறையாக பைசர் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கிறது. டிசம்பர் 14ம் திகதி முதல் கனடாவில் கொரோனா தடுப்பூசி டோஸ் அளிக்கப்படுகிறது.
அதே டிசம்பர் மாதம் மாடர்னா தடுப்பூசிக்கும், பிப்ரவரி மாதம் ஆஸ்ட்ராசெனகா மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கும், மார்ச் மாதம் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கும் கனேடிய நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.